தர்மபுரியில் அரசு பஸ் மரத்தில் மோதி விபத்து: 24 பேர் படுகாயம்

தர்மபுரி: தர்மபுரி அருகே அரசு பஸ் சாலையோரம் உள்ள ஆல மரத்தின் மீது மோதியதில் 3 பள்ளி மாணவர்கள் உட்பட 24 பேர் படுகாயம் அடைந்தனர். ஓசூரிலிருந்து தர்மபுரி நோக்கி இன்று காலை அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது பாலக்கோடு அருகே சூடப்பட்டி நெடுஞ்சாலை எதிரே அதிவேகத்தில் வந்த லாரி மீது மோதாமல் இருக்க பஸ் ஓட்டுநர் கணேசன் பிரேக் போட்டுள்ளார். அதிகாலை முதலே சாரல் மழை பெய்து வந்ததால் பிரேக் நிற்காமல், கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து சாலை ஓரம் உள்ள புளிய மரத்தின் மீது மோதியது.

அப்போது பஸ்ஸின் பின்னால் வந்து கொண்டிருந்த கன்டெய்னர் லாரியும் பஸ்ஸின் பின்புறம் மோதியது. இந்த விபத்தில் 3 பள்ளி மாணவர்கள் உட்பட 24 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் இதில் படுகாயமடைந்த 10-க்கும் மேற்பட்டோரை மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மகேந்திரமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Related Stories: