போர்ட்பிளேயர்: அந்தமான் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த 2 நாட்களில் 24 நிலநடுக்கங்கள் ஏற்பட்ட நிலையில், இன்று காலையும் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஆனால், எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அந்தமான் கடலில் இன்று அதிகாலை 5.55 மணியளவில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கம் காரணமாக, அந்தமான் நிக்கோபார் தீவுகள் குலுங்கின. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதுவரை எவ்வித உயிர் சேதமோ, சொத்து சேதமோ ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.