ஹைத்ராபாத்: தெலுங்கானாவில் வங்கி லாக்கரை உடைத்து, கொள்ளையர்கள் நகைகளையும், பணத்தையும் அள்ளிச்சென்றது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள பூசாப்பூரில், தெலுங்கானா கிராமிய வங்கி உள்ளது. தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள இந்த வங்கியில், கடந்த சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் வங்கி பூட்டப்பட்டது. நேற்று வழக்கம் போல், அதிகாரிகள் வங்கியை திறப்பதற்காக வந்தபோது, வங்கியின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த வங்கி லாக்கர் கேஸ் கட்டர் மூலம் உடைக்கப்பட்டு, அதில் இருந்த ரூ.4 கோடி மதிப்பிலான 8 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டதும், லாக்கரை உடைக்க கேஸ் கட்டர் பயன்படுத்தியபோது, அதில் இருந்த ரூ.7 லட்சம் பணம் தீயில் எரிந்து சாம்பலாகியதும் தெரியவந்தது.