டென்மார்க்: டென்மார்க்கில் வணிக வளாகம் ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்தனர். டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் நகரில் விமான நிலையம் அருகே உள்ள வணிக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்ட வேளையில் திடீரென துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. வணிக வளாகத்திற்கு வந்த இருவர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சரமாரியாக சுட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் வணிக வளாகத்தில் இருந்து அலறி அடித்துக் கொண்டு வெளியேறின\ர்.