சென்னை: பயங்கரவாத நடவடிக்கைகளை இந்தியாவில் அனுமதிக்க முடியாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: நுபூர் சர்மாவின் விமர்சனத்தை ஆதரித்து உதய்பூரில் தையல் கடை நடத்தி வந்த கன்னையா லால் கருத்து தெரிவித்ததால் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகள் செய்வதைப்போல அவரது தலையை வெட்டி, அதை பகிரங்கமாக சமூக வலைதளங்களில் பதிவேற்றி இருக்கும் கொடூரம் கடும் அதிர்ச்சி அளிக்கிறது.