பெரியகுளம்: பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட வடகரை பகுதியில் திறக்கப்படாமல் உள்ள அங்கன்வாடி மையங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட வடகரை பகுதியில் 2 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வந்தது. அந்த மைய கட்டிடங்கள் மிகவும் மோசமான நிலையில் சேதமடைந்திருந்தது. அதனால், கடந்த 2019-20 நிதியாண்டில் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் நிதியிலிருந்து 14 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்பின், பழைய அங்கன்வாடி மைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணிகள் துவங்கப்பட்டது. அப்பணிகள் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் முடிவடைந்தது.