சேலம்: சந்தைக்கு தக்காளியின் வரத்து அதிகரித்திருப்பதால், அதன் விலை வீழ்ச்சியடைந்திருப்பதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்த பகுதிகளில் மீண்டும் வழக்கம் போல உற்பத்தி தொடங்கி இருப்பதால் தக்காளியின் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் 2 டன் மட்டுமே வந்துகொண்டிருந்த சேலம் காய்கறி சந்தையில் தற்போது 20 டன் தக்காளி வரை விற்பனைக்கு வருகிறது. இதனால் தக்காளியின் விலை சரிந்துள்ளது. சில்லறை விலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.15 முதல் ரூ.20 வரை குறைந்திருப்பதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.