சூலூர்: சூலூர் பகுதியில் நொய்யல் ஆற்றில் ஆடுகள் செத்து மிதந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தண்ணீரில் விஷம் கலக்கப்பட்டதா? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். சூலூர் படகுத்துறை அருகே நொய்யல் ஆற்றில் ஆடுகள் செத்து மிதந்து கிடப்பதாக நேற்று இரவு சூலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.