நீலகிரி: கொடைக்கானல் அருகே பயன்படுத்தப்படாத பிளாஸ்டிக் பாட்டில்களை வைத்து வனத்துறையால் கட்டப்பட்டிருக்கும் அறை சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்திருக்கிறது. மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் நெகிழி பொருட்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக வனத்துறை சார்பில் கொடைக்கானலில் இருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் மன்னவனூர் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை வைத்து ஒரு அறை கட்டப்பட்டுள்ளது.