ஆவடி: சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர். ஆவடியில் உள்ள தனியார் கவரிங் நகைக்கடையில் 17 வயது சிறுமி வேலை பார்க்கிறாள். அதே கடையில் தண்டையார்பேட்டையை சேர்ந்த சுபேர் உசேன்(24) என்ற வாலிபர் வேலை பார்த்துள்ளார். கடந்த சில மாதங்களாக சிறுமியை காதலிப்பதாக சுபேர் உசேன் ஆசைவார்த்தை கூறி வந்துள்ளார். பின்னர் சிறுமியை கடந்த வாரம் சேலம், ஈரோடு என பல்வேறு இடங்களுக்கு சுபேர் உசேன் அழைத்து சென்றுள்ளார். அங்கு பலமுறை சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்.