வாரணாசி: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சென்ற ஹெலிகாப்டர் மீது பறவை மோதியதால் வாரணாசியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. வாரணாசியில் நடந்த ஆய்வு கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஆதித்யநாத் நேற்று முன்தினம் வந்தார். அதில் பங்கேற்ற பிறகு, அவர் அங்குள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.