முதுகுதண்டில் அறுவை சிகிச்சை; அமரீந்தர் சிங்கிடம் நலம் விசாரித்த பிரதமர்

பஞ்சாப்: முதுகுதண்டில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அமரீந்தர் சிங்கிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்தார்.  பஞ்சாப் லோக் காங்கிரஸ் நிறுவனரும், மாநில முன்னாள் முதல்வருமானவர் அமரீந்தர் சிங். இவர், கடந்த 2002-2007 மற்றும் 2017-2021 உட்பட 9 ஆண்டுகளுக்கும் மேலாக பஞ்சாப் முதல்வராக பதவி வகித்துள்ளார். இவர் முதுகு வலியால் அவதிப்பட்டார். இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி அமரீந்தர் சிங்குக்கு, முதுகுத்தண்டில் நேற்று வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது லண்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமரீந்தர் சிங் நலமுடன் இருப்பதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அவர் நாளை வீடு திரும்பிவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் நநேர்திர மோடி அமரீந்தர் சிங்கிற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார்.

Related Stories: