தம்புல்லா: இலங்கைச் சென்றுள்ள இந்திய மகளிர் அணி அங்குள்ள தம்புல்லாவில் நடக்கும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஆட்டத்தில் வென்ற இந்தியா தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.தொடர்நது 2வது டி20 ஆட்டம் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இலங்கை மகளிர் முதலில் களமிறங்கினர். சிறப்பாக விளையாடிய தொடக்க வீராங்கனைகள் விஸ்மி 45, கேப்டன் சமரி 43ரன் குவித்து முதல் விக்கெட்டுக்கு 87ரன் சேர்த்தனர். அடுத்து வந்தவர்கள் இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஒற்றை இலக்கில் ஆட்டமிழந்தனர். அதனால் இலங்கை 20ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 125ரன் எடுத்தது. இந்திய தரப்பில் தீப்தி சர்மா 2 விக்கெட் எடுத்தார்.