தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சென்னை: தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மேற்கு திசை காற்று வேக மாறுபாட்டால் தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை முதல் ஜூன் 29ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக்கடல், வட ஆந்திர, தமிழக கடலோரத்தில் பலத்த சூறாவளி வீசும். லட்சத்தீவு, கர்நாடக, மத்திய கிழக்கு தென் கிழக்கு, அரபிக்கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி வீசக்கூடும். ஜூன் 28ல் லட்சத்தீவு, கேரளா, கர்நாடகா, மத்திய கிழக்கு, தென்கிழக்கு, அரபிக்கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி வீச வாய்ப்பு உள்ளது. மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி வீச வாய்ப்பு உள்ளதால் அடுத்த 5 நாட்களுக்கு மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: