கோத்தகிரி : தொடர்ந்து பருவமழை பெய்து வருதால் செடியிலேயே முட்டைகோஸ்கள் அழுகி வருகின்றன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், முட்டை கோஸ் பயிர்கள் செடிகளிலேயே அழுகும் நிலை ஏற்பட்டு உள்ளது. கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளான நெடுகுளா,ஈளடா,கேர்கம்பை,ஆடத்தொரை, பாண்டியன் பார்க்,மிளிதேன் உள்ளிட்ட பகுதிகளில் மலைப்பயிரான முட்டை கோஸ் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளது.