குன்னூர்: நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக தேயிலை தொழில் உள்ளது. இதனை நம்பி பல்லாயிரக்கணக்கான சிறு குறு விவசாயிகள், தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு பறிக்கும் பசுந்தேயிலை பல்வேறு தொழிற்சாலைகளில் தேயிலை தூளாக உற்பத்தி செய்யப்படுகிறது.இவை குன்னூரில் உள்ள ஏல மையத்தில் ஏலம் விடப்பட்டு, பிற மாநிலங்கள் மற்றும் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், உலக சந்தையில் இந்திய தேயிலை மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது.