தேனி: தேனி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்ட அலுவலராக பணிபுரிந்து வருபவர் ராஜராஜேஸ்வரி. போடியை சேர்ந்தவர் உமாசங்கர். இவர் திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில், குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த மாதம் 30ம் தேதி ராஜராஜேஸ்வரியின் அலுவலக அறைக்குள் நுழைந்த, உமாசங்கர் முன்விரோதம் காரணமாக அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திடீரென அவரது பைக்குள் வைத்திருந்த அரிவாளால் ராஜராஜேஸ்வரியை வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த ராஜராஜேஸ்வரி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.