திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தற்போது தொடர் விசாரணை நடந்து வருகிறது. இதற்கு நடிகர் திலீப் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் உயர் நீதிமன்றத்தின் அனுமதியுடன் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்படி ஏற்கனவே வாக்குமூலம் கொடுத்தவர்கள், விசாரணையின்போது பல்டியடித்தவர்கள் உள்பட பலரிடம் மீண்டும் விசாரணை நடக்கிறது.இதற்கிடையே மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சித்தீக். திலீப்பின் மிக நெருங்கிய நண்பர். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே இவரிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது திலீப்புக்கு ஆதரவாகவே வாக்குமூலம் கொடுத்தார். தவிர பாதிக்கப்பட்ட நடிகையை பலமுறை கிண்டல் செய்து பேட்டி கொடுத்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்நிலையில் நடிகர் சித்தீக் சமீபத்தில் ஒரு தனியார் டிவிக்கு பேட்டி அளித்தார். அப்போது நடிகை பலாத்கார வழக்கில் திலீப் ஒரு சிறிய தவறு செய்து விட்டார்.