புதுடெல்லி: யுபிஎஸ்சி முதல் நிலை தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் 13 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கு தேவையான 861 இடங்களுக்கான சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வை கடந்த 5ம் தேதி நடத்தியது. இந்த எண்ணிக்கை தற்போது 1,022 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த முதல் நிலை தேர்வை 11.52 லட்சம் பேர் எழுதினர். இதன் தேர்வு முடிவு நேற்று வெளியானது. இதில், 13,090 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.