திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பெரியகுப்பத்தில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் ஆய்வு மேற்கொண்டார். 3 வகுப்பறைகள், கழிவறை மற்றும் ஸ்மார்ட் வகுப்பறை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எம்எல்ஏ உறுதியளித்தார். திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 22 வது வார்டு பெரியகுப்பத்தில் உள்ளது நகராட்சி நடுநிலைப் பள்ளி. 1 முதல் 8 ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 275 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த நகராட்சி நடுநிலைப் பள்ளியை எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் நேற்று ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, கடந்த 2 நாட்களாக பெய்த மழையின் காரணமாக பள்ளியின் மாடியில் தேங்கியிருந்த மழை நீரை உடனடியாக அகற்ற நகராட்சி ஊழியர்களுக்கு எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் உத்தரவிட்டார். மேலும், வகுப்பறையில் பாடம் நடத்தி்க் கொண்டிருந்த போது பள்ளி மாணவர்களிடம் கலந்துரையாடினார். ஸ்மார்ட் கிளாஸிலும் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது அங்கும் பார்வையிட்டார்.