சேலம்: மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் தமிழ்நாட்டில் இதுவரை 75 லட்சம் பேருக்கு மருத்துவ பெட்டகங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சேலத்தில் சர்வதேச யோகா தின விழாவில் பங்கேற்ற பின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் தொலைதூர மலை கிராமங்களுக்கும் மருத்துவ சேவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மகப்பேறு சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணி பெண்களுக்கு யோகா பயிற்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.