லண்டன் : ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் பிரிட்டன் முழுவதும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பன்மடங்கு அதிகரித்து விட்ட செலவீனங்களை எதிர்கொள்ளும் விதமாக ஊதியத்தை 11% அளவுக்கு உயர்த்த வேண்டும் என்று பிரிட்டன் ரயில்வே ஊழியர்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கு போரிஸ் ஜான்சன் அரசு தரப்பில் இருந்து உரிய விளக்கம் தரப்படாதை அடுத்து திங்கட்கிழமை முதல் பிரிட்டன் முழுவதும் ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். 50,000த்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ரயில் நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.