ஐதராபாத்: 2017ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்த சமந்தாவும், நாக சைதன்யாவும் 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் தாங்கள் பிரிவதாக சோஷியல் மீடியாவில் அறிவித்தனர். இது கோடிக்கணக்கான ரசிகர்களை வேதனையடைய வைத்தது. சமந்தா இதை எல்லாம் கடந்து சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். சமந்தாவுடன் பிரிவை அறிவித்தாலும், சமந் தாவின் சந்தோஷத்துக்கு முக்கியம் தருவதாகவே பல பேட்டிகளில் நாக சைதன்யா குறிப்பிட்டார். சமந்தா பற்றி அக்கறையாக பல கருத்துகளைப் பகிர்ந்தார். இந்த நேரத்தில் நடிகை சோபிதா துலிபலாவுடன் நாக சைதன்யா டேட்டிங் சென்று வருவதாக தகவல் பரவியுள்ளது. இருவரும் மிக நெருக்கமாகப் பழகி வருவதால், நாக சைதன்யா மீண்டும் காதலில் விழுந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. நாக சைதன்யா தற்போது ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் புதிதாக இடம் ஒன்றை வாங்கியுள்ளார்.