நக்சல்கள் தாக்குதல் சிஆர்பிஎப் வீரர்கள் 3 பேர் வீர மரணம்

புதுடெல்லி: ஒடிசாவில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் 3 சிஆர்பிஎப் படையினர் வீர மரணம் அடைந்தனர். ஒடிசா மாநிலத்தின் நுவாபடா மாவட்டத்தில் பெடான் பகுதியில் உள்ள முகாமில் இருந்து 7 சிஆர்பிஎப் வீரர்கள் மற்றொரு முகாமிற்கு நேற்று புறப்பட்டு சென்றனர். இத்தகவல் கிடைத்து பதாதரா பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் பதுங்கி இருந்த நக்சலைட்கள், வீரர்கள் மீது திடீரென தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் காவலர், 2 துணை உதவி ஆய்வாளர்கள் என 3 பேர் வீர மரணமடைந்தனர். ஒடிசா டிஜிபி பன்சால் கூறும்போது, `எதிர்பாராத விதமாக நுவாபடா தாக்குதலில் 3 சிஆர்பிஎப் படையினர் வீர மரணமடைந்தனர். சம்பவ இடத்துக்கு மூத்த அதிகாரிகள் விரைந்துள்ளனர். தாக்குதல் நடந்த பகுதியில் சிறப்பு அதிரடி குழு, சிஆர்பிஎப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்,’ என்று தெரிவித்தார்.

Related Stories: