டெல்லி : குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தேர்வு செய்யப்பட இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. ட்விட்டர் பக்கத்தில் இன்று அவர் வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டின் மிகப்பெரிய தேசிய காரணத்திற்காக தாம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். கட்சியில் முக்கிய இடத்தை வழங்கிய மம்தா பேனர்ஜிக்கு யஷ்வந்த் சின்ஹா நன்றி கூறியுள்ளார். இன்று டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தலைமையில் நடைபெறும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் யஷ்வந்த் சின்ஹா வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.