திருமங்கலம்: திருமங்கலம் அருகே கூடுதல் வரதட்சணை கேட்டதாக போலீஸ்காரர் உள்ளிட்ட நான்குபேர் மீது மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சொக்கநாதன்பட்டியை சேர்ந்தவர் சங்கீதா(20). இவருக்கும், திருமங்கலம் செங்குளத்தை சேர்ந்த காசிநாதன் மகன் செல்வகுமார்(30) என்பவருக்கும் கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது. செல்வகுமார் கோவையில போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். திருமணத்தின் போது சங்கீதா வீட்டினர் 33 பவுன்நகை மற்றும் சீர்வரிசை கொடுத்ததாக கூறப்படுகிறது.
