டெல்லி: அக்னிபாதை திட்டத்திற்கு எதிராக இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதால் வடமாநிலங்களில் பதற்றம் நிலவுகிறது. இளைஞர்களின் கொந்தளிப்பையும், ஆவேச போராட்டத்தையும் மீறி அக்னிபாதை திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் அறிவிக்கையை அரசு வெளியிட்டிருப்பதால், நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு சில அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இதனால் உத்திரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.