கலைஞர் பிறந்த நாள் 500 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள்: எம்எல்ஏ சுந்தர் வழங்கினார்

மதுராந்தகம்: மதுராந்தகம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் முத்தமிழறஞர் கலைஞர் பிறந்த நாள் விழாவில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்து கொண்டு  500 பெண்களுக்கு சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் மதுராந்தகம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் 99 வது பிறந்த நாள் விழா மற்றும் திமுக கழக ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் மதுராந்தகம் தெற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் பொன்.சிவகுமார் தலைமையில் தேவாதூர் கிராமத்தில் நடந்தது.

ஒன்றிய கழக நிர்வாகிகள் வெங்கடேசன், தனியரசு, ஏகாம்பரம், பத்மா செல்வராஜ், ஜெய்சங்கர், அரசு, தெய்வசிகாமணி, சண்முகம், ரோக்சகாயராஜ், ஸ்டீபன்சவரி, அன்பராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேவாதூர் ஊராட்சி மன்ற தலைவர் குமார் அனைவரையும் வரவேற்றார்.  காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்து கொண்டு 500 பெண்களுக்க சேலை, மறைந்த 3 கிளைக் கழக செயலாளர் குடும்பங்களுக்கு தலா 10,000 உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள்  வழங்கினார்.  

இந்தக் கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் பவானி கண்ணன் பேசினார்.  மாவட்டக்குழு பெருந்தலைவர் செம்பருத்தி துர்கேஷ், மாவட்ட கவுன்சிலர் ராஜா ராமகிருஷ்ணன், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியாக ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் மீனா ஜெயராமன் நன்றி கூறினார்.

Related Stories: