தூத்துக்குடி: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று தூத்துக்குடி காமராஜ் கல்லூரி வளாகத்தில் விவேகானந்தா கேந்திரம் சார்பில் நடந்த வ.உ.சி 150வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்றார். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 8 பேருக்கு வஉசி விருதுகளை வழங்கி அவர் பேசியதாவது: இளைய தலைமுறை நம் தேசத்தலைவர்கள் ஆற்றிய சேவைகளை, அர்ப்பணிப்புகளை, கடமைகளை நினைவு கொள்ள வேண்டும். இங்கே அமர்ந்திருப்பவர்கள் சனாதன தர்மத்தை உலகறியச் செய்வதற்கு முயற்சிக்க வேண்டும். நாம் அந்த நிலையை நோக்கி நகர்ந்து வருகிறோம். அரசின் நல்ல திட்டங்கள் சிலரால் தவறாக கொண்டு செல்லப்படுகிறது. ‘‘அக்னிபாதை’ திட்டம் இளைஞர்களுக்கு வரப்பிரசாதம்.