செய்யூர்:பக்கிங்காம் கால்வாயை தூர்வாரி அதில் நீர் போக்குவரத்து ஏற்படுத்தித் தர வேண்டுமென சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.சோழமண்டல கடற்கரைக்கு இணையாக ஓடும் கால்வாயாக விளங்குகிறது பக்கிங்காம் கால்வாய். ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதியிலிருந்து தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வரை பக்கிங்காம் கால்வாய் செல்கிறது. ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட இக்கால்வாயின் நீளம் 420 கி.மீ., இது சென்னையின் பிரதான நீர்வழித்தடமாக இந்த பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் செல்லும் வழியில் உள்ள சதுப்பு நிலங்கள், உப்பு தயாரிக்கும் இடமாகின. அந்த காலத்தில், சென்னைக்கு வடக்கு பகுதியிலிருந்து எள்ளு, விறகு, வரட்டி, நெல், கருவாடு போன்ற அனைத்து பொருட்களும் படகுகள் மூலம் இந்த கால்வாய் வழியே கொண்டு சென்று வந்ததும் குறிப்பிடத்தக்கது. சென்னையிலிருந்து இவ்வழியாக பொருட்களை ஏற்றி சென்று வந்ததால் போக்குவரத்து செலவு குறைந்ததோடு நீண்ட தூரம் பயணிக்கும் நேரமும் குறைந்தது. இத்தகைய சிறப்பு மிக்க பக்கிங்காம் கால்வாய் கடந்த பல ஆண்டு காலமாக முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால், வரலாற்று சிறப்புமிக்க இந்தக் கால்வாய் தூர்ந்து மறைந்து போகும் நிலை உள்ளது.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘கடந்த 200 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் காலத்தில். இந்த கால்வாய் உருவாக்கப்பட்டு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் இந்த கால்வாய் வழியாக நீர்வழிப் போக்குவரத்து நடைபெற்றது.