சபரிமலையில் ஆனி மாத பூஜை பக்தர்கள் குவிகின்றனர்

திருவனந்தபுரம்: ஆனி மாத பூஜைகளை முன்னிட்டு சபரிமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 14ம் தேதி திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் முதல் பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. கணபதி ஹோமம், உஷபூஜை, களபாபிஷேகம், கலசாபிஷேகம் உள்பட வழக்கமான பூஜைகளுடன் படிபூஜை, உதயாஸ்தமன பூஜை ஆகிய சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. நடை திறந்த அன்று முதலே சபரிமலையில் பக்தர்கள் திரளாக குவிந்து வருகின்றனர். ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. வரும் 19ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும். அன்று இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும். மீண்டும் ஆடி மாத பூஜைகளுக்காக ஜூலை மாதம் 16ம் தேதி சபரிமலை கோயில் நடை திறக்கப்படும்.

Related Stories: