லண்டன்: மூன்று ஆண்களிடம் இயற்கைக்கு மாறான பாலியல் உறவு கொண்ட வழக்கில் சிக்கிய ஆஸ்கர் விருது பெற்ற நடிகர் கெவின் ஸ்பேசியை நீதிமன்றத்தில் ஆஜராக லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஹாலிவுட் நடிகரும், ஆஸ்கர் விருது பெற்றவருமான கெவின் ஸ்பேசி (62), கடந்த 2005, 2008, 2013 ஆகிய ஆண்டுகளில் மூன்று ஆண்களை கட்டாயத்தின் அடிப்படையில் இயற்கைக்கு மாறான முறையில் பாலியல் உறவு கொண்டதாக புகார்கள் அடுத்தடுத்து எழுந்தன. இந்த விவகாரம் தொடர்பாக கெவின் ஸ்பேசிக்கு எதிராக லண்டன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கை லண்டன் நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் லண்டன் பெருநகர காவல்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கெவின் ஸ்பேசி, மூன்று ஆண்களிடம் பாலியல் உறவு கொண்ட வழக்கில் அவர் நாளை (வியாழன்) 10 மணிக்கு வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.