கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தெற்கு தீத்தாம்பட்டி கிராமத்தில் பத்திரகாளி அம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக அதே கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவர் குடும்பத்துடன் ஹெலிகாப்டரில் வந்தார். நடராஜனின் தந்தை பாலசுப்பிரமணியன். குடும்பத்துடன் திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டியில் வசிக்கிறார். தந்தையும் மகன் நடராஜனும் அங்கு இரும்பு கடை வைத்துள்ளனர். ஹெலிகாப்டரில் செல்ல வேண்டும் என்பது நடராஜன், அவரது மகன் மோகித்திற்கு் ஆசை.