திண்டிவனம்: திண்டிவனத்தில் போலி வாக்காளர் அடையாள அட்டை தயாரித்த கம்ப்யூட்டர் சென்டருக்கு வருவாய் துறையினர் போலீசார் முன்னிலையில் சீல் வைத்தனர். திண்டிவனம்- சென்னை ரோடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (52). இவர் திண்டிவனம் காமாட்சி அம்மன் கோயில் தெருவில் ராகவேந்திரா பிரின்டர்ஸ் என்ற பெயரில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். இங்கு திண்டிவனம் அடுத்த நடுவனந்தல் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவர் வாக்காளர் அடையாள அட்டை எடுத்துள்ளார். அதை பயன்படுத்தி ஆதார் கார்டில் பெயர் திருத்தம் செய்ய வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள இ சேவை மையத்துக்கு சென்றுள்ளார். அங்கிருந்த பணியாளர்கள் செல்வராஜ் கொடுத்தது போலி வாக்காளர் அடையாள அட்டை என அறிந்து அவரை வட்டாட்சியர் வசந்த கிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர்.