எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் ஓராண்டு சாதனை விளக்க கூட்டம்: 500 பேருக்கு நலத்திட்ட உதவி

ஊத்துக்கோட்டை: எல்லாபுரம் வடக்கு ஒன்றியம் திமுக சார்பில் கல்பட்டு ஊராட்சியில் கலைஞரின் 99வது பிறந்தநாளையொட்டி திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இதில் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் கல்பட்டு ஊராட்சியில் கலைஞரின் 99வது பிறந்த நாள் மற்றும் திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான பி.ஜே.மூர்த்தி தலைமை வகித்தார். இதில் அனைவரையும் மாவட்ட பிரதிநிதி வெங்கடேசன், ஒன்றிய மாணவரணி அணி துணை அமைப்பாளர் சிலம்பரசன், கிளை செயலாளர் கோபி, கல்பட்டு ஊராட்சி மன்ற துணை தலைவர் நாராயணன் ஆகியோர் வரவேற்றனர்.  இதில் பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, அபிராமி குமரவேல், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் தண்டலம் என்.கிருஷ்ணமூர்த்தி, ஊத்துக்கோட்டை பேரூராட்சி மன்ற துணை தலைவர் குமரவேல், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் லோகேஷ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சங்கர், சிவாஜி, டில்லிசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் தலைமை கழக பேச்சாளர் வண்ணை புகாரி, முரசொலி மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனைகள் குறித்து விளக்கி சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில், மாவட்ட பிரதிநிதி வி.பி.ரவிக்குமார், தனசேகரன், வழக்கறிஞர் சீனிவாசன், அப்புன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதில் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முடிவில் தேவன், ரகுவரன், ராஜேஷ் ஆகியோர் நன்றி கூறினர்.

Related Stories: