பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு ஒன்றியம் குமாராஜிபேட்டை, மோட்டூர் அருகே மலைப்பகுதியில் 40க்கும் மேற்பட்ட இருளர் சமுதாய மக்கள் குடிசைகள் அமைத்து வசித்து வருகின்றனர். இவர்கள் இருளர் காலனிக்கு சென்றுவர அங்குள்ள ஓடைக்கு அருகில் தார்சாலையை பயன்படுத்தி வந்தனர். ஓராண்டுக்கு முன்பு பெய்த கன மழைக்கு ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தார் சாலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு இருளர் கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் ஆய்வு செய்ய எஸ்.சந்திரன் எம்எல்ஏ சென்றார். அப்போது, அப்பகுதியில் சாலை வசதியின்றி இருளர்கள் பள்ளிக்கு செல்லவும், ரேஷன் பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் வாங்கி வர பெண்கள் அவதிப்படுவதை பார்த்தார்.