கந்தர்வகோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை பகுதியில் தற்சமயம் விவசாயிகள் விதைந்த நிலக்கடலை விதைகள் நன்கு வளர்ந்து பூக்கும் நிலையில் உள்ளது. கடலை செடிகளின் மஞ்சள் நிறத்தில் பூக்கள் பூத்து இருக்கும் காட்சியை வைத்து கடலையின் மகசூல் திறனை கண்டு கொள்ளலாம் என விவசாயிகள் கூறுகிறார்கள். அதன் அடிப்படையில் பார்க்கும்போது நடப்பு பட்டத்தில் கடலை நன்கு விளைந்து விவசாயிகளுக்கு நல்ல மகசூல் பலன் தரும் படி இருக்கும் என கூறுகிறார்கள்.