மதுக்கரை : கோவையில் இருந்து ஒரு டெம்போ அதிக பாரம் ஏற்றிக்கொண்டு மதுக்கரை பாலக்காடு ரோடு வழியாக நேற்று மதியம் சென்றது. அப்போது அந்த டெம்போ மதுக்கரை மிலிட்டரி கேம்ம்ப் அருகே கட்டுப்பாட்டை இழந்து திடீரென நடு ரோட்டில் கவிழ்ந்தது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுஇத்தகவலறிந்து மதுக்கரை போலீசார் விரைந்து சம்பவயிடம் வந்து பார்த்தபோது அது ரேஷன் அரிசி கடத்தி வந்த டெம்போ என்று தெரிய வந்தது. உடனே டெம்ப்போவை அப்புறப்படுத்தி போக்குவரத்து நெரிசலை சரி செய்து விட்டு டெம்போவை ஓட்டி வந்த பாலக்காட்டை சேர்ந்த ஜெபஸ்டியனிடம் விசாரித்தனர்.