ஜார்க்கண்டில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர்களை தீ வைத்து கொளுத்திய உறவினர்கள்: ஒருவர் பலி; மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை

 ராஞ்சி: ஜார்க்கண்டில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபரை, சிறுமியின் பெற்றோர் தீ வைத்து கொளுத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கும்லா பகுதியைச் சேர்ந்த சிறுமியும் பெற்றோரும், அருகில் உள்ள கிராமத்தில் நடந்த திருமணத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பி உள்ளனர். அப்போது, பேருந்து கிடைக்காததால், அந்த வழியாக பைக்கில் சென்ற குல்மா பகுதியைச் சேர்ந்த இருவரிடம் சிறுமியை ஏற்றிச் செல்லுமாறு பெற்றோர் கூறி உள்ளனர். ஆனால், அந்த இருவரும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதனை பெற்றோரிடம் சிறுமி கூறிய நிலையில், ஆத்திரமடைந்த பெற்றோரும் உறவினர்களும், சம்பந்தப்பட்ட இரு நபர்களையும் கடுமையாக தாக்கி உள்ளனர். தொடர்ந்து ஆத்திரம் அடங்காமல், அவர்கள்மீது மண்ணெண்ணெயை ஊற்றி பைக்குடன் தீ வைத்து உள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொரு நபர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள கும்லா போலீசார், குற்றவாளிகளை கைது செய்வோம் எனக் கூறி உள்ளனர்.

Related Stories: