ஸ்பெயின்: இந்த மாத இறுதியில் ஸ்பெயினில் நடைபெறவுள்ள நேட்டோ கூட்டமைப்பு மாநாட்டிற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்க்கிக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளது. இதனால் ரஷ்யாவுக்கும் - உக்ரைனுக்கும் இடையேயான மோதல் மேலும் உக்கிரமடையக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. நேட்டோ நாடுகள் கூட்டமைப்பு மாநாட்டில் ரஷ்யாவின் தாக்குதல் தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று அந்த கூட்டமைப்பின் துணை பொதுச்செயலாளர் விர்சயா ஜியானோ கூறியுள்ளார். இதனிடையே உக்ரைன் அண்டை நாடுகளில் ஒன்றான போலந்து அருகே திடீரென நேட்டோ நாடுகளின் கூட்டு படைகள் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன. ரஷ்யாவுக்கு மிரட்டல் விடும் தோணியில் போர் ஒத்திகை நடைபெற்று வருகிறது.