ஆம்பூர்: ஆம்பூர் அடுத்த தேவலாபுரத்தில் குடும்ப தகராறில் மனைவியை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்த கணவனை உறவினர்கள் சரமாரி அடித்து உதைத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மகள் நந்தினி(27). வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த பங்களாமேட்டை சேர்ந்தவர் விக்னேஷ்(32). இருவரும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் ஒரு ஷூ கம்பெனியில் வேலை செய்தபோது காதலித்தனர். ஒரு வருட காதலுக்கு பின்னர் இருவரும் கலப்பு திருமணம் செய்து கொண்டனர். இதை தொடந்து நந்தினி தனது கணவருடன் பேரணாம்பட்டு அடுத்த பங்களா மேட்டில் வசித்து வந்தார். தற்போது விக்னேஷ் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். தம்பதியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.