வியட்னாம்: வியட்னாம் நாட்டில் இந்தியாவில் உற்பத்தியான 12 அதிவிரைவு காவல் படகுகளை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் ஒன்றிய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். ஒன்றிய அரசு அனுமதியோடு 10 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான 12 அதிவிரைவு காவல் படகுகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன. இந்த திட்ட பணிகள் வெற்றிகரம் ஆக நிறைவடைந்துள்ளன என்பதனை இந்த விழா சூட்டிக்காட்டுகிறது என தெரிவித்தார். நம்முடைய மேக் இன் இந்தியா-மேக் பார் தி வேர்ல்டு திட்டத்திற்கான சிறந்த எடுத்துக்காட்டாக இந்த திட்டம் அமைந்துள்ளது. வியட்னாம் போன்ற நம்முடைய நெருங்கிய நண்பர்கள், மேம்பட்ட பாதுகாப்பு தொழில் ஒத்துழைப்பின் வழியே, நம்முடைய பாதுகாப்பு தொழில்களுக்கான உருவாக்கத்தின் ஒரு பகுதியாக வருமென்றால் நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைவோம்.