மும்பை: நாடு முழுவதும் தியேட்டர்களில் படம் பார்க்க யாரும் வராததால், அக்ஷய் குமாரின் பட காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.கொரோனா பாதிப்புக்குப் பிறகு இப்போது பல படங்கள் தியேட்டர்களில் வெளியாகி நன்றாக ஓடுகின்றன. இந்நிலையில், பாலிவுட்டில் ஸ்டார் நடிகரான அக்ஷய் குமாரின் சாம்ராட் பிருத்விராஜ் படம் கடந்த வாரம் வெளியானது. இந்தியில் மட்டுமின்றி, தென்னிந்திய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு படம் வெளியானது. இப்படத்தைப் பார்த்து பாஜ தலைவர்கள் பலரும் பாராட்டினர். முன்னதாக இப்படத்தின் தலைப்பு பிருத்விராஜ் என்று மட்டுமே இருந்தது. ‘சாம்ராட் பிருத்விராஜ் என தலைப்பை மாற்ற வேண்டும். இந்துத்துவ சாம்ராஜ்ஜியத்தின் ராஜா என்ற வாசகத்தையும் இடம்பெறச் செய்ய வேண்டும்’ என்று இந்துத்துவ அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. இதையடுத்து அதுபோன்ற மாற்றங்களைச் செய்து படத்தை வெளியிட்டனர். இப்படத்துக்கு உத்தர பிரதசம், மத்திய பிரதேசம் ஆகிய பாஜ ஆளும் மாநிலங்களில் கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்பட்டது. இதையடுத்து ஒன்றிய அரசின் ஆதரவு இருப்பதால், படம் பெரிய வெற்றிபெறும் என்ற கருத்து நிலவியது.