ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பூந்தோட்டம் பர்ணகார தெருவை சேர்ந்தவர் சபியுல்லா (56). கார் வியாபாரி. இவர், தனது காரில் சென்னைக்கு சென்றுவிட்டு இன்று அதிகாலை ஊருக்கு திரும்பினார். காரை அவரது டிரைவர் ஆம்பூர் புதுமனை ஆயிஷாபீ நகரை சேர்ந்த நவாஸ் (26) என்பவர் ஓட்டினார். ஆம்பூர் அடுத்த கொம்மேஸ்வரம் அருகே வந்தபோது திடீரென கார் பழுதானது. இதனால் சபியுல்லா, அவ்வழியாக வந்த மற்றொரு காரில் வீடு திரும்பினார்.