சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் உள்ள ஆர்த்தி ஸ்கேன்ஸ் மையங்கள் மற்றும் அதற்கு தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்பட 9 மாநிலங்களில் 45 கிளைகளுடன் ஆர்த்தி ஸ்கேன்ஸ் மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் முறையாக வருமான வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் பேரில் நேற்று சென்னை வடபழனி, கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஆர்த்தி ஸ்கேன்ஸ் மையங்களில் வருமான வரித்துறையினர் திடீரென சோதனை நடத்தினர். மேலும் அண்ணாநகரில் உள்ள அந்நிறுவனத்தின் நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அதில் பணிபுரியும் மருத்துவர்களின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.