பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தலைமை ஆசிரியர் கைது

மேச்சேரி: சேலம் மாவட்டம், தாரமங்கலத்தில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் மற்றும் தலைமை ஆசிரியராக மேட்டூரை சேர்ந்த விஜயகுமார்(47) பணியாற்றி வருகிறார். இவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, ஒருசில மாணவிகளின் உறவினர்கள், பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியர் விஜயகுமாரை தாக்க முயன்றனர். இந்த நிலையில்,விஜயகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் நேற்று கைது செய்தனர்.

Related Stories: