கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே தாராசுரம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு மாடி வீட்டில் வசித்து வருபவர் விஜய். இவர், வீடுகள் மற்றும் கடைகளுக்கு தண்ணீர் கேன் போடும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கீர்த்திகா. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஹரிப்ரியன் என்ற குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று வீட்டின் பால்கனியில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை, எதிர்பாராத விதமாக இரும்பு தடுப்பு கம்பிகளுக்கு இடையே தலையை விட்டபோது தலை மாட்டிக்கொண்டது.