காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் கலைஞரின் பிறந்தநாள் விழா கோலாகலம்: அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரம்:சுந்தர் எம்எல்ஏ அணிவித்தார்

மதுராந்தகம்:  காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் விழாவையொட்டி, அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்டதிமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தங்கமோதிரம் அணிவித்தார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், மதுராந்தகம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் 99வது பிறந்த நாள் விழா வை மதுராந்தகத்தில் நேற்று சிறப்பாக கொண்டாடினர். இதில்,  மதுராந்தகம் அரசினர் மருத்துவமனையில் பிறந்த 8 குழந்தைகளுக்கு தங்க மோதிரம், பரிசு பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து இனிப்புகள் வழங்கினார். இதனை தொடர்ந்து மதுராந்தகம் நகர திமுக சார்பில் கலைஞரின் 99வது பிறந்த நாளை குறிக்கும் விதமாக 99 கிலோ பிரமாண்ட கேக் செய்யப்பட்டிருந்தது.  காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ வெட்டி பொதுமக்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில்,  மதுராந்தகம் நகர மன்ற தலைவர் மலர்விழி குமார், நகர செயலாளர் கே.குமார், மதுராந்தகம் வடக்கு ஒன்றிய செயலாளர் சத்திய சாய், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  மேலும், அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் ஒரத்தி கிராமத்தில் திமுக தலைவர் கலைஞரின் படத்திற்கு ஒன்றிய செயலாளர் கே.கண்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சித்தாமூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக நடைபெற்ற கலைஞரின் பிறந்தநாள் விழாவில் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஏழுமலை, சித்தாமூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிற்றரசு ஆகியோர் கலைஞரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினர். இதனை தொடர்ந்து காவனூர் கிராமத்தில் திமுக கொடியை ஏற்றி இனிப்பு வழங்கினர்.  சூனாம்பேடு கிராமத்தில் ஆயிரம் பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டது.  பாலையூர் கிராமத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.  கொளத்தூர் கிராமத்தில் 200 கழக முன்னோடிகளுக்கு வேட்டி சேலை வழங்கப்பட்டது.

லத்தூர் ஒன்றியம் செய்யூர் கிராமத்தில் ஒன்றியக்குழு பெருந்தலைவர் சுபலட்சுமி பாபு துணை பெருந்தலைவர் கிருஷ்ணவேணி தணிகாசலம், லத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு ஆகியோர் கலைஞரின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.இதனை தொடர்ந்து, புதுப்பட்டு, முகையூர், மேலப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் ஏழை எளியவர்களுக்கு இனிப்பு மற்றும் பிரியாணி வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில், கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று கலைஞர் பவளவிழா மாளிகையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளரும் உத்தரமேரூர் எம்எல்ஏவுமான க.சுந்தர் தலைமை தாங்கினார். விழாவை முன்னிட்டு கருணாநிதி மற்றும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த பரனூர் அரசு மறுவாழ்வு இல்லத்தில் தங்கியுள்ள 200 தொழுநோயாளிகளுக்கு அன்னதானம் மற்றும் வேட்டி சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.கே.டி. கார்த்திக் தலைமை தாங்கினார். இதில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, தொழுநோயாளிகளுக்கு பிரியாணி, வேட்டி சேலைகளை வழங்கினார்.

மாமல்லபுரம்: மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகம் அருகே காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக  துணை செயலாளர் வெ.விஸ்வநாதன் தலைமையில் 99 கிலோ கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதில், கவுன்சிலர்கள் மோகன் குமார், கெஜலட்சுமி, பூபதி, லதா, வள்ளி, மாவட்ட பிரதிநிதி சண்முகாநந்தம், ராமச்சந்திரன், மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். திருப்போரூர்: திருப்போரூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கலைஞரின் பிறந்தநாள் விழா நேற்று திருப்போரூரில் கொண்டாடப்பட்டது. திருப்போரூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இதற்கான விழாவில் 99 கிலோ கேக் வெட்டப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. வாலாஜாபாத்:  வாலாஜாபாத் பேரூராட்சியில் 15 வார்டுகளிலும் கருணாநிதியின் 99வது பிறந்தநாளையொட்டி திமுக கொடி கம்பங்களில் புதிய கொடிகளை ஏற்றி இனிப்புகள் வழங்கியும், ஏழை - எளியவர்களுக்கு அன்னதானம் வேட்டி, சேலைகள், அரிசி வழங்கி சிறப்பித்தனர். இதனைத் தொடர்ந்து வாலாஜாபாத் பேருந்து நிலையம், பேரூர் செயலாளர் பாண்டியன் தலைமையில் கொண்டாடப்பட்டன. உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றிய மற்றும் நகர திமுக ஒன்றிய செயலாளர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் குமார், நகர செயலாளர் பாரிவள்ளல், உத்திரமேரூர் பேரூராட்சித் தலைவர் சசிகுமார் முன்னிலை வகித்தனர்.  செய்யூர்: சித்தாமூர் ஒன்றியம் விளாங்காடு கிராமத்தில் கலைஞரின் 99வது பிறந்தநாளையொட்டி  திமுக கொடி ஏற்றப்பட்டு 200க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அடுத்த  கொத்திமங்கலத்தில் கலைஞரின் பிறந்தளையொட்டி ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. ஒன்றிய செயலாளர்  வீ.தமிழ்மணி தலைமை தாங்கினார்.  பேரூர் செயலாளர் ஜி.டி.யுவராஜ், திருக்கழுக்குன்றம் ஒன்றிய சேர்மன் ஆர்.டி.அரசு, துணை சேர்மன் எஸ்.ஏ.பச்சையப்பன், மாவட்ட கவுன்சிலர் ஆர்.கே.ரமேஷ், ஒன்றிய அவை தலைவர் நல்லூர் ஜெயராமன், மாவட்ட பிரதிநிதி செல்வக்குமார் முன்னிலை வகித்தனர்.

Related Stories: