மதுராந்தகம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் கலைஞரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை

மதுராந்தகம்: மதுராந்தகம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில், முன்னாள் முதல்வர் கலைஞரின் 99வது பிறந்த நாளையொட்டி, அவரது உருவ படத்திற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் பொன்.சிவகுமார் மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செய்தார்.காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், மதுராந்தகம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில், முன்னாள் முதல்வர் கலைஞரின் 99வது பிறந்த நாள் விழா நேற்று சித்தாமூர் பஜார் பகுதியில் கொண்டாடப்பட்டது. அப்போது, கலைஞரின் உருவப் படத்திற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் பொன்.சிவகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார். இதனை தொடர்ந்து வேட்டூர் கிராமத்தில் 200 பேருக்கு மதிய உணவு வழங்கினார். பின்னர், காட்டு தேவாதூர் கிராமத்தில் திமுக கொடிஏற்றி பொதுமக்களுக்கு  இனிப்புகள் வழங்கினார். ஜமீன் எண்டத்தூர் கிராமத்தில் வைக்கப்பட்ட கலைஞரின் உவப்படத்திற்கு அப்பகுதி மக்கள், திமுக முன்னோடிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.  கீழ்கரணை, முன்னூத்தி குப்பம், பெருவெளி, கொள்ளம்பக்கம், சிறுநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் கலைஞரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி கொடிஏற்றி 2000 பேருக்கு இனிப்பு மற்றும் அன்னதானத்தை திமுக நிர்வாகிகள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில், ஒன்றிய நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: