கொழும்பு: இலங்கையில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அந்நாட்டின் மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. பற்றாக்குறையாக இருக்கும் அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்யாவிடில் எதிர்காலத்தில் பல பிரச்சனைகள் ஏற்படும் என்றும் தற்போது 12 முதல் 20 நாட்கள் வரை அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகள் உதவாதவை என்றும் மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இலங்கையில் உணவுப்பொருட்கள், எரிபொருள், மின்சார தட்டுப்பாட்டைத் தொடர்ந்து மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.